உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த ‘Thangalaan’
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவான ‘Thangalaan’ திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி புதிய சாதனையை படைத்து வருகிறது.
‘Thangalaan’ திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டாகிரோன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். கோலார் தங்கக் கிணறின் பின்னணி அமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் யதார்த்த வாழ்வியலை, ஆதிக்கத்திற்கு எதிரான அவர்களின் போராட்டங்களை மாய யதார்த்தம் மற்றும் புதுமையான திரை மொழியுடன் அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
சீயான் விக்ரமின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், அவரது நடிப்பின் தனிச்சிறப்பும் திரைப்படத்தின் பலராலும் பாராட்டப்பட்டது. இது, விக்ரமின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினருக்கும் புதிய அனுபவத்தை அளித்துள்ளது.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) திரையரங்குகளில் வெளியான ‘Thangalaan’ திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. உலகளாவிய அளவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் 26 கோடியிற்கு மேல் வசூலித்து, சீயான் விக்ரமின் திரையுலக பயணத்தில் மிகச் சிறந்த முதல் நாள் வசூலாக உருவாகியுள்ளது.
‘Thangalaan’ தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெற்றியுடன் வெளியானது. இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 6ம் தேதியிலிருந்து வட இந்திய நகரங்களில் திரையரங்குகளில் வெளியிடப்படும், இதனால், திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kami menggunakan cookie untuk menganalisis lalu lintas situs web dan mengoptimalkan pengalaman situs web Anda. Dengan menerima penggunaan cookie, data Anda akan dikumpulkan bersama data pengguna lainnya.